நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03

ஆய்வுகள் | மற்றவை by முஹம்மது சுபைர் முஹம்மதி ஃபிர்தௌஸி On Jul 24, 2023 Viewers: 265


நற்குணமும் நபியும்  வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03

நற்குணமும் நபியும்

வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03

- முஹம்மது சுபைர் முஹம்மதி ஃபிர்தௌஸி


யார் இந்த அடிமையை விலைக்கு வாங்குவீர்கள்?..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போற்றத்தக்க குணங்களில் உள்ள ஒரு உயரிய பண்பு, அவர்கள் சாதாரண பொது மனிதரின் மானம், மரியாதை கண்ணியத்தை காத்து நடப்பார்கள். அதை காப்பார்கள், மற்றவர்களுக்கு அதை தருவார்கள். சக தோழர் போன்றும் நடந்து கொள்வார்கள்.


பணம், புகழ், அழகு, பதவி இவற்றைப் பார்த்து அன்பு கொள்ளும் இக்காலகட்டத்தில் இவை எதுவுமே இல்லாத ஒரு சாதாரண கிராமவாசியை முஹம்மது நபி (ஸல்) எந்த அளவு நேசித்தார்கள் என்பது இன்றைய உலகிற்கு ஒரு முன் மாதிரியாகும். அவ்வாறான கலப்பற்ற நேசம் நம்மில் ஏற்படும் போது இப்பொழுது இருக்கும் மனப்பிரச்சனைகள் நீங்கிவிடும். அவ்வாறே இன்றுள்ள நபர்கள் மற்ற நபர்களை நேசித்தால் உலகத்தில் ஏற்படும் பாதி பிரச்சனைகள் குறைந்து விடும்.


நபி (ஸல்) அவர்கள் தன் நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள், என்பதை இச்சம்பவத்தின் மூலம் அறியும் போது நம்மையறியாமல் என்ன ஒரு சிறந்த முன்மாதிரி! என்று எண்ண தோன்றுகிறது...


மதினாவில் புகழ்பெற்ற கோத்திரமான கத்ஃபான் கோத்திரத்தில் அல்அஷ்ஜா கிளையை சேர்ந்தவர் ஜாஹிர் இப்னு ஹிஜாம் அல்அஷ்ஜயி  (ரலி). இந்த கிளையினர் பழங்காலத்திலிருந்து மதினா நகரை ஒட்டியிருந்த சுற்று புறங்களில் வசித்து வந்தார்கள்.


ஜாஹிர் இப்னு ஹிஜாம் அல்அஷ்ஜயி (ரலி) அவர்கள் மிகவும் ஏழையான எளிமையான நபராக இருந்தார். இவர் அந்த சமூகத்தில் ஒரு சாதாரண மனிதர். இவருக்கு என்று எந்த ஒரு சிறப்பும் கிடையாது. நிறத்திலும் தோற்றத்திலும் அழகு என்று எதுவும் அவரிடத்தில் இல்லை. ஆனால் அவரை உயர்த்தும் ஒரு சிறந்த பண்பு அவரிடத்தில் இருந்தது.


அது என்னவெனில், அவர் அல்லாஹ்வின் தூதரை அளவுக்கு அதிகமாக நேசித்து வந்தார், அளவுக்கு மீறி அன்பு வைத்து இருந்தார். அந்த நேசத்தின் காரணமாக எப்பொழுதெல்லாம் மதினா நகரத்திற்கு வியாபரம் செய்ய சென்றாலும் சரி, அல்லது மற்ற காரணத்திற்காக சென்றாலும் சரி, அவ்வாறு செல்லும் போது அவரின் கிராமத்தில் கிடைக்கும் சிறந்த பொருள்களை எல்லாம் அல்லாஹ்வின் தூதருக்காக கொண்டு செல்வார். உயர்ந்த காய்கறிகள், பழங்கள், தேன், சத்துமாவு மற்றும் கிராமத்தில் தயார் செய்யப்படும் பிற உணவு பொருட்களை எல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக எடுத்துச் செல்வார். நபி (ஸல்) அவர்களும் நகரத்தில் கிடைக்கும் சிறந்த பொருட்களை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்து அனுப்புவார்கள்.


எந்த அளவு அவர்களின் நேசம் இருந்ததென்றால் ஒரு நாள் ஜாஹிர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தந்த கௌரவம் அந்தஸ்து கண்ணியம் அனேகமாக எந்த ஒரு நபித் தோழர்களுக்கும் கிடைத்திராத ஒன்று.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஜாஹிர் (ரலி)  என்னுடைய கிராமத்து தோழர், நான் அவருடைய நகரத்து தோழர் என்று கூறியுள்ளார்கள்.


எவ்வளவு சிறப்பான வார்த்தைகள் இது. எந்தளவுக்கு அவருடைய நேசத்தை மதித்துள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள். சற்று ஹதீஸின் வாசகங்களை கவனியுங்கள். நபி அவர்கள் கூறினார்கள்:  

நிச்சயமாக ஒவ்வொரு நகரத்து வாசிக்கும் ஒரு கிராம வாசி நண்பராக இருப்பார். மேலும் நிச்சயமாக முஹம்மதின் குடும்பத்தாருக்கு ஜாஹிர் இப்னு ஹிஜாம் (ரலி) அவர்கள் ஆவார்.


இத்தோடு முடியவில்லை, அவர்களின் அன்பின் மொழிகளும், பரஸ்பரமும், இணக்கமும், அன்பை வெளிப்படுத்தும் வாசகங்களும், தருணங்களும், அவர்கள் மத்தியில் இருந்த இங்கீதமும், இதன் காரணமாக தான் அவர்கள் மத்தியில் அந்த அன்பு தொடர்ந்தது, நீடித்தது. இதற்கான சான்று தான் கீழ் வரும் இந்த சம்பவம்.


ஒரு நாள் ஜாஹிர் (ரலி) அவர்கள் தன்னுடைய பொருட்களை கொண்டுவந்து மதினாவின் சந்தை அல்மனாகஹ்வில் விற்றுக்கொண்டிருந்தார்.


அச்சமயம் சந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தருகிறார். ஜாஹிரை (ரலி) அங்கு பார்த்துவிடுகிறார்கள். ஜாஹிர் (ரலி) நபி (ஸல்) அவர்களை பார்க்காதவாறு ஜாஹிர் (ரலி) அவர்களின் முதுகு பின் வழியாக மெதுவாக வந்து அவரின் கண்களை தன் கை விரல்களால் இறுக்கமாக மூடிக் கொள்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.


சகோதரர்களே! மேலும் படிப்பதற்கு முன் சற்று சிந்தியுங்கள்... அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடத்தையும் குணமும் ஒழுக்கமும் எந்த அளவுக்கு உயர்ந்ததாகவும் உயர்வாகவும் மேலாகவும் இருக்கிறது என்று.


ஜாஹிர் (ரலி) அவர்கள் ஒரு சாதாரண பொதுவான சராசரியான மனிதர். அவருடைய மிக சிறந்த குணம், சிறப்பு தகுதி, தன்மை அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களையும் நேசித்தார். அவ்வாறே இவரின் மிக சிறந்த பெரிய சிறப்பும் மதிப்பும் அந்தஸ்தும் எதுவெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களும் அவரை நேசித்தார்கள். அவர் மீது அளவில்லா அன்பு கொண்டார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களின் ஒரு சொல் இவ்வாறுள்ளது.


அபுதர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்கள், உங்களில் நலிந்த மக்களிடையே என்னைத் தேடுங்கள். ஏனெனில், உங்களில் நலிந்தவர்களால்தான் நீங்கள் வாழ்வாதாரம் வழங்கப்பெறுகிறீர்கள். பகைவர்களுக்கெதிராக உதவியும் வழங்கப்பெறுகிறீர்கள் என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.


அல்பானி ரஹ் அவர்கள் இதை ஸஹீஹ் என்று கூறிவுள்ளார்கள்.


நூல் திர்மிதி பாகம் 2 பக்கம் 996 ஹதீஸ் எண் 1624 ரஹ்மத் பதிப்பகம்.


மேலும் இது அஹமது, அபீதாவூத் நூல்களிலும் வந்துள்ளது.


ஜாஹிர் (ரலி) அவர்களுக்கு தன் பின்னால் இருப்பது யார்? என்று தெரியவில்லை. அவருக்கு சில நொடிகள் பதற்றம் ஏற்பட்டது. அவரோ யார் இது? யார் இது? என்று கேட்டுக் கொண்டே நபி (ஸல்) அவர்களின் கையின் ஸ்பரிசத்தையும் நறுமணத்தையும் உணர ஆரம்பித்தார்.


அதுவும் மெல்லிய பட்டாடை போன்ற ஸ்பரிசம் கொண்டது, ரோஜா பூவை விட அதிக நறுமணத்தை கொண்ட நறுமணம். அவரின் கண்களை மூடிக் கொண்டு அவரை தழுவுவதும், இவ்வாறு தன் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துவது நபி (ஸல்) அவர்கள் தான் என்பதை மெதுவாக உணர்ந்து அறிந்து கொள்கிறார்.


அடையாளம் கண்ட அவர். இது ஒரு கிடைக்காத பாக்கியம், ஒரு நல்ல அருமையான வாய்ப்பு என்று உணர்ந்த அவர் தன் முதுகை நபிகளாரின் மார்பின் மீது இறுக சாய்ந்துக் கொண்டு, தன் முதுகை நபி (ஸல்) அவர்களின் மார்போடு தழுவுகிறார். மேலும் உலகின் அதிபதியல்லவா?! என்னை பற்றிருக்கிறார் என ஆர்ப்பரிக்கும் அன்பும்,  உள்ளத்தில் உச்சபச்ச மகிழ்ச்சியிலும், அளவு கடந்த அன்பும் பாசமும் அவரது உள்ளம் திளைத்திருந்தது.


அப்போது நபி (ஸல்) யார் இந்த அடிமையை விலைக்கு வாங்குகிறீர்கள்? யார் இந்த அடிமையை விலைக்கு வாங்குகிறீர்கள்? என்று மக்களைப் பார்த்து கேட்டார்கள். அதற்கு ஜாஹிர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே இந்த கருப்பு நிற கிராமவாசியை யார் அடிமையாக வாங்குவார்கள்? அப்படி வாங்கினாலும் அது நஷ்டமான வியாபாரம் அல்லவா? என்றார்.


அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: ஜாஹிரே! நீங்கள் மக்கள் முன் வேண்டுமானால் மதிபற்றவராக இருக்கலாம், ஆனால் அல்லாஹ்வின் முன் உங்கள் மதிப்பு மிகவும் உயர்ந்தது. ஏனென்றால் நீங்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரயும் நேசிக்கிறீர்கள். அதனால் அல்லாஹ்விடத்தில் உங்கள் மதிப்பும் கண்ணியமும் மிகவும் பெரியது என்று பதில் கூறுகிறார்கள்.


ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 13/107, ஷர்ஹுஸ் ஸுன்னாஹ் 13/181, ஜம்வுல் வஸாயில் ஃபி ஷர்ஹிஷ் ஷமாயில் 2/29.


படிப்பினைகள்:


இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தை பின்பற்றவும் அதை எடுத்து சொல்லவும் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறோம். அதை எதிர்த்து நாமும் பல வகைகளில் போராடி வருகிறோம். ஆனால் மேடைப் பேச்சுகளில் பரவிய மார்க்கம் அல்ல, இஸ்லாம் வெறும் மேடை பேச்சுகளால் மட்டுமே இஸ்லாத்தை பரப்பி விட முடியாது. இதை நம் தூதர் அவர்களும் நமக்கு காட்டி தரவில்லை.


இஸ்லாம் என்பது வாய்ச்சொல் மார்க்கம் அல்ல. அது ஒரு வாழ்வியல் மாற்றம் என்பதை நம் தூதர் அவர்களின் வாழ்வு நமக்கு அப்பட்டமாக காட்டுகிறது. இன்று மேடை போட்டு பேச துடிக்கும் நம் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தை வாழ்வியலில் பிரதிபலிக்க மறந்து விட்டது.


நாம் ஒரு விஷயத்தை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கொள்கை பரந்து விரிய வேண்டுமென்றால் அது அங்குள்ள எளியவர்களிடம் போய் இருக்க வேண்டும். அந்த கொள்கையை எளியவர்கள் பற்றி பிடித்தால் அதன் பின் எவராலும் அந்த கொள்கையை அழிக்க முடியாது. காரணம் அவர்களின் வீரியம் ஆச்சரியமிக்கதாக இருக்கும்.


கொஞ்சம் உங்கள் மனதிற்குள் மீட்டிப் பாருங்கள்  ஹுதைபியா உடன்படிக்கையின் நினைவலைகளை.. மக்காவை விட்டு யார் தப்பித்து வந்தாலும் அவர்களை உடனே திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றும் மதினாவை விட்டு வருபவர்களை தாங்கள் திருப்பி அனுப்ப மாட்டோம் என்றும் அநீதமாக ஒரு விதிமுறையை கூறினார்கள் மக்கத்துக் காஃபிர்கள்.


வெளிப்படையாக அநீதமாக தோன்றினாலும், அதில் உற்று கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஒருவர் இஸ்லாத்தை நோக்கி ஒரு முறை வந்து விட்டால் அவரால் இஸ்லாத்தை விட்டு கண்டிப்பாக செல்ல முடியாது. காரணம் இஸ்லாமிய வாழ்வியலும் முஹம்மது நபியின் வழிமுறையும் அவ்வளவு பெரிய ஈர்ப்பை அவர்களுக்குள் ஏற்படுத்தி இருந்தது.


ஒரு கொள்கையில் ஒருவருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தவும் அவர்களை கொள்கையில் கட்டி போடுவதற்கும் உணர்வு ரீதியான அணுகுமுறையே மிகவும் சிறந்ததாக இருக்கும். அண்ணல் நபி அவர்கள் மனிதர்களின் உணர்வுகளை கையாள தெரிந்தவர்கள்.


ஒரு முஸ்லிம் தன் ஒவ்வொறு அசைவிலும் பிறறை ஈர்க்கும் படி நடந்து கொள்ளும் போது நம் செயலால் நாமும் பலரை இஸ்லாத்தில் ஏற்க செய்ய முடியும்.


ஏற்றத்தாழ்வு பார்க்காமல் காட்டும் தூய அன்பும் எவரும் தம்மிடம் எளிமையாக நெருங்கும்படி நடந்து கொள்ளும் இந்த தலைவரின் நடைமுறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்.


மேற்கண்ட சம்பவத்தின் மூலம், மனிதர்களின் உணர்வுகளை தன் அழகிய எளிமையான ஆர்ப்பாட்டம் இல்லாத குணத்தின் மூலம் எவ்வாறு கட்டி போட்டார்கள் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அழகு, பணம், பதவி குடும்பப்  பெருமை இவையெல்லாம் தான் ஒரு மனிதனை மதிக்கத்தக்கவனாக ஆக்கும் என்று பெருமிதம் கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில், ஒரு சாதாரண  கிராமவாசியை கண்ணியத்திற்குரியவராக மதித்ததன் மூலம் இஸ்லாத்தில் உயர்வுக்கு உரியவர் யார் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அழகாக பிரதிபலிக்க செய்தார்கள்.

***

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE